Tuesday, May 12, 2009

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!

2002-ல் இந்தியா இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தோல்வியின் விளிம்பின் இருந்து வென்றபோது அன்று வீதியில் திரிந்து "ஐ லவ் இந்தியா" என்று போவோர் வருவோரிடம் எல்லாம் கத்தினேன்.

இந்தியா 1998-ல் அமெரிக்க செயற்கைகோள்களை ஏமாற்றிவிட்டு புத்திசாலித்தனமாக தன் இரண்டாவது அனுகுண்டு சோதனையை நடத்திய போது வாரக்கணக்கில் நண்பர்களிடம் பெருமை அடித்துகொண்டிருந்தேன்.
இதைப்போல எத்தனனயோ சம்பவங்கள்....

ஆனால் இன்று?

முட்டாளாய் இருந்திருந்தாலாவது, ராஜபக்க்ஷே மேல் சாபமிட்டு கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சூண்டு சிந்திக்க தெரிகிறதே.
இன்று ஈழதமிழர் படும் அத்துனை துன்பத்திற்கும் நான் பிறந்த நான் போற்றிய இந்தியா தான் வேறு எவரும் இல்லை என்ற நிலைமையில் நான் எங்கே போய் என் நாட்டுப்பற்றை வீசுவது.

இன்று அபிஷேக் சிங்வி மற்றும் சுதர்சனம் சொன்னார்கள். அங்கே மக்கள் கொல்லபடுவதற்கு கவலை மட்டும் தான் தெரிவிக்க முடியுமாம். வேறு ஒன்றும் செய்ய இயலாதாம்.

இதை 5 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா அவங்க இப்போது நிம்மதியாக் இருந்திருப்பாய்ங்களேயா. இப்படி திட்டம் போட்டு கொன்னுட்டிங்களே..

ஐந்து வருட வராலாறை படித்தால் தான் தெரிகிறது சோனியா ஏன் போனமுறை(2004) ஆட்சிக்கு அலைபாய்ந்தார் என்று.

2004 ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் சோனியா பிரதாமவதற்கு சிக்கல் நேர்ந்தது. கடைசிநேரத்தில் பிரதமாராக அறிவிக்க பட்டது நாம் எல்லோருக்கு தெரியும்.
ஆனால் அதேநேரம் ஈழதமிழர்களுக்கு புதைகுழி தோண்ட சோனியா முதல் பிடி மண்ணை அள்ளியது எவ்வளவு பேருக்கு தெரியும்?

மன்மோகன் சிங் பிரதமரென தீர்மானிக்கப்பட்டது கூட கடைசி நேரத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே இரண்டு முக்கிய பதவிகளை சோனியா தீர்மானித்து விட்டார்.

ஒன்று - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இரண்டு - பிரதமரின் சிறப்பு ஆலோசகர் உள்நாட்டு பாதுகாப்பு.

முதல் பதவிக்கு அமர்த்தபட்டவர் J.N. தீக்க்ஷித். இந்திய அமைதி(?)படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூட்டிவிட்டதில் இவரின் பங்கு ஜெயவர்த்தனேவுக்கு நிகரானது என்று ஈழத்தை படித்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது பதவிக்கு, 1992-ல் ஓய்வு பெற்று பன்னிரண்டு வருடம் ஈசி சேரில் அமர்ந்து ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருந்த எழுபது வயது இளைஞரான M.K. நாராயணன் அமர்த்தபட்டார்.
ஈழவிவகாரத்தில் 1987 முதல் 1990 இவர் செய்த குழப்பம் அதிகாரவர்க்க மேல்மட்டத்தில் மிக பிரசித்தம்.

ஆகவே இப்படியாக , இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொலைகளத்திற்கான திட்டத்தை ஐந்து வருடத்திற்கு முன்னமே நம் பாரதத்தின் பெருமைக்குரிய இரவல் அன்னை வெற்றிகரமாக அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இன்று தீவுத்திடலில் முழங்குகிறார், நாங்கள் தமிழருக்கு சம உரிமை கிடைக்க பாடுபடுவோம் என்று.

இதை கேட்கிற என் காதுகளுக்கு எங்கே சென்று ஈயத்தை ஊத்துவது.

எங்கே சென்று இந்த அவலத்தை முறையிடுவது. கண்டிப்பாக கடவுளிடம் இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!!

Monday, May 11, 2009

என்னை கவர்ந்த பதிவர்களுள் ஒருவருனா தமிழ்சசியுடன் கருத்து மாறுபடுகிறேன்

கிட்டதட்ட நான்கு வருட வனவாசத்திற்கு பிறகு நான் எழுதும் முதல் பதிவு இது.



சில நாட்களாக மறுபடியும் எழுதலாம் என்று எண்ணியபோதும் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் இன்று சசியின் "போதுமடா இந்த ஈழப் போராட்டம்" பதிவை பார்த்தவுடன் பொறுக்க முடியவில்லை.



சசியின் எழுத்தை நான் தொடர்ந்து படித்து வருபவன். அவரின் சிந்திக்கும் திறன் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அவரின் இந்த பதிவு எனக்கு ஒர் அதிர்சியை தந்தது. ஆதலால் அவரின் இந்த பதிவுக்கு பதிலாக ஒரு பதிவே போடும் முடிவுக்கு வந்தேன்.



தமிழ்மக்கள் படும் இன்னல்களுக்கு யார் காரணம்?புலிகளா ?கண்டிப்பாக இல்லை. இன்று புலிகள் இல்லாவிட்டாலும் மக்கள் இதே இன்னல்களை (இன்னும் அதிகம் கூட) அனுவித்திருப்பார்கள்.



சிங்கள வெறியர்களா?இவர்களும் இல்லை. ஒரு வெறிபிடித்த மிருகத்திடம் கருனையை எப்படி எதிர்பார்க்காலாம். அதற்கு தெரிந்தது எல்லாம் நாசம் விளைவிப்பது.



வேறு யார்தான் பொருப்பேற்பது.கண்டிப்பாக இந்தியாவும் அதன் குடிமக்களாக வாழும் என்னைப்போன்ற மானங்கெட்ட தமிழர்களும் தான்.



இன்று இந்த பிரச்சினையில் எந்த நாடுகளும், அமெரிக்கா உட்பட, தலையிட முடியாமல் இருப்பதற்கு காரணம் யார்? இந்தியா மட்டும்தான்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய பொருட்டல்ல. சீன ஒலிம்பிக் ஜோதியின்போது நடந்ததை எண்ணிப்பாருங்கள்.



ஹில்லாரி கிளின்டன் இந்த பிரச்சினையின் சாரம்சம் அறிந்திருந்தும் கூட, அமெரிக்காவிடமிருந்து ஒரு அறிக்கை வந்ததே ஒழிய வேறு எதுவும் நடக்க வில்லை. ஏனென்றால் இன்றைய நிலைமையில் அமெரிக்காவிற்கு இந்தியா ரொம்ப தேவை.



இந்தியா நினைத்திருந்தால் எப்பொழுதோ தனி ஈழம் அமைந்திருக்கும். ஏன் சும்மாயிருந்தால் கூட அது அமைந்திருக்கும். அது நடக்காததற்கு யார் காரணம்



இவவளவு நாளா ஈழம் தனிநாடாகிறதிற்கு தான் இந்தியா எதிர்ப்பாக இருக்கிறது ஆனால் ஈழமக்களுக்கு அல்ல என்று (ஈழ)தமிழர்கள் திடமாக நம்பினார்கள்.

அதிலும் நம் தமிழின தலைவர் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அராசாங்கம் ஈழ மக்கள் வாழ வேண்டுமானால் உதவ மறுப்பார்களே ஒழிய சாக கண்டிப்பாக உதவ மாட்டார்கள் என் திடமாக நம்பினார்கள்.


இன்று புலிகளை குற்றம் சாட்டுவபர்களுக்கு ஒர் உண்மையை எடுத்து கூறவேண்டும். புலிகள உன்மையாகவே மக்களை பிடித்து வைத்திருந்தால் ஏன் உலகெங்கிலும் உள்ள பெரும்பாண்மையான ஈழ மக்கள் அவர்களுக்கு எதிராக பேசவில்லை. ஏன் அவர்களின் ஈழ சொந்தங்கள் அவர்களிடம் முறையிடவில்லை.



நீங்கள் பிபிசி சொன்னதை தான் நம்ப வேண்டுமென்றால் ஒடுக்கபட்டவர்களின் கருத்து ஒன்றுமே நம் காதுக்கு வராது.
பிபிசி வெறும் ஒரூ கமர்சியல் தொலைக்காட்சி. தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக நடுநிலையாக உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கிறார்கள். மற்றபடி அவர்களும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானவர்களே.


உங்கள் பதிவை பார்த்தவுடன் நிறைய மனிதாபமானிகள்(?) ஒடோடி வந்துவிட்டார்கள் பின்னூட்டமிட. ஆனால் கொத்து கொத்தாக தமிழர்கள் சாகிறபோது இந்த நாய்கள் குரைப்பதே இல்லை அப்படிபட்ட தெருநாய்களுக்கு பிறந்த கேவலாமான ஜன்மங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்து விட்டீர்களே என்று நினனைக்கும் போதுதான் கஷ்டமாக உள்ளது.

Friday, August 05, 2005

இன்றே கடைசி! திங்கள் முதல் புது ரிலீஸ்..............

எக்சிட் இன்டர்வியு முடிச்சாச்சு!
ரிலீவிங் ஆர்டர் வாங்கியாச்சு!
ஃபேர்வெல் மெஸெஜ் அனுப்பியாச்சு!
பசங்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு!
பொண்ணுக்கிட்டயும் தான்!

இனி

புது வேலை!
புது ஆபிஸ்!
புது ஆளூக!
கலக்கல்தான் போங்க...

ஏர்டெல் எதோ பாயிண்ட் இல்லைன்னு கனெக்ஷன் குடுக்க மாட்டேனுட்டானுக. போய் டாடா இன்டிகாம் கிட்ட பேசனும். இணைய கனெக்ஷ்ன் வீட்டுக்கு குடுக்கணும். திரும்பவும் எழுதனும். நிறைய கத்துக்கனும்.

ஆதலால் நண்பர்களே அதுவரை Have Fun

வாழ்த்துகளுடன்

வெற்றி திருமலை

Thursday, August 04, 2005

சாதி என்றொரு மாய்ப்பிசாசு

காஞ்சி பிலிம்ஸ் "இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு?" என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த போது எழுத நினைத்தவை இவை.

இட ஒதுக்கீட்டை விட்டு விடுவோம். என் மனதுள் எழும் கேள்வி இதுதான்.

பிறப்பால் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிப்பது சரியா?

இக்கேள்வியை எழுப்பிய உடனே இணையத்தில் அதிகமாக எழுதிவரும் சில நடுநிலைவாதிகள்(?), நாங்களும் அதைத்தான் சொல்லி வருகிறோம் என்று விளம்புவார்கள்.

ஆனால் அவர்களின் எத்தனை பேர் தங்களின் உள்மனதில் "தாங்கள் உயர்ந்தவர்கள்" என்ற எண்ணம் இல்லாமலிருப்பவர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் எழுத்தை தொடர்ச்சியாக வாசித்த போதுதான் தெரிகிறது அவர்கள் ஆங்காங்கே அவர்களையறியாமல்(?) வெளிப்படுத்தும் அந்த உயர்வு மனப்பாண்மை.

நான் பிராமணனகாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று டோன்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது.
இதேபோல் நான் ஒரு பள்ளனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் பறையனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று கூற முடியமா? அப்படியே கூறினாலும் மக்கள் ஒரே அளவுகோலில் பார்ப்பார்களா?
இதையும் சொல்லிவிட்டு நான் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை என்று கூறுகிறீர்களே இது உங்களுக்கு நெருடலாயில்லை? இந்த ரெண்டு விஷயத்தில் எதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.
அதை மட்டும் சொல்லிவிடலாமே.
மனதுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதைவிட நினைத்ததை நேரிடையாகவே சொல்லிவிட்டால் குறைந்தபட்சம் உங்களின் மனதுக்காவது துரோகம் பண்ணாத பெருமை கிடைக்கும்.

சாதி பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் கருத்தை கூறுங்கள் அல்லது அதைப்பற்றி எழுதாமலே விட்டுவிடுங்கள். அதைவிட்டுவிட்டு ஆதரிக்காமாதிரி எதுக்கறது, எதிர்க்கிற மாதிரி ஆதரிக்கறது என்ற அறிவுஜீவி முயற்சிகள் வேண்டாம்.

(பி.கு:- இந்த பதிவுலும் அனானிமஸ் பின்னுட்டங்களுகான வசதியை எடுத்துவிட்டேன், ஏனென்றால் முகம் தெரியாமல் வந்து ஒருவரை வசைபாடுவது எனக்கு பிடிக்காது. அதற்கு பின்னூட்டங்கள் ஒன்றும் வரமாலிருப்பதே மேல்)

Thursday, July 28, 2005

என் வலைப்பூ பயணம் ..........

ஒன்றிரண்டு பதிவுகளில் பின்னூட்டமிட்டுருந்தாலும் வலைப்பூ ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் முதலில் நோக்கத்தை தெளிவுபடுத்திக்கொண்டால் தான் வெளிப்பாடு அதற்கு தக்கமாதிரி இருக்கும் என்று.

கீழ்கண்ட விஷயங்களுக்காக எழுதப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

அடுத்தவர்களை திருத்துவதற்கு(நம்மாலேயெ இன்னும் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இதில என்ன போய் மத்தவங்களுக்கு சொல்றது)

பிரபலமாவதற்கு(அந்த கஷ்டம் நமக்கு வேண்டாம்டா என்று முடிவெடுத்துவிட்டேன்)

புரட்சி செய்வது( தமிழ்நாட்டில் அந்த வார்த்தையே கேவலப்படுத்திட்டாங்க, இப்ப ஸ்கூல் பசங்ககிட்ட போய் செ குவாரா அப்படின்னு ஒரு புரட்சிக்காரர் தென் அமெரிக்காவில் இருந்தார் அப்படின்னு சொன்ன அவங்க அவரை விஜயகாந்த், சத்தியராஜ், பாக்கியராஜ், முரளி கூடவெல்லாம் மனசுக்குள்ள ஒப்பிட்டு கேவலப்படுத்திடுவாங்க)

அப்புறம் என்ன மயித்துக்கு எழுதறது, கம்னு கடாசிராலமன்னு ஒரு எண்ணம் வேற. அப்பத்தான் ஒரு விடை கிடைத்தது.
என் திருப்திக்கு எழுதலாம்னு. வாழ்க்கையில் மனிதனக்கு அவன் ஈகோ வை திருப்திதான்றதுதான் பெரிய Challengeனு நினைக்கிறேன்.

சரின்னு எழுதலாம்னு ஆரம்பித்து ஒரு ஏழு பதிவும் எழுதியாச்சு. அப்பத்தான் தோணியது எழுதுவது எவ்வளவு கடினம் என்று. கைவலித்தது என்பது கூட பெரிய விஷயமில்லை ஆனால் நினைத்ததை எழுத்துக்குள் கொண்டுவருவது இருக்கிறதே அதுதான் பெரிய விஷயம்.
எழுதன பதிவெல்லாம் இப்ப வாசித்ததுக்கு பிறகுதான் தோணுது இன்னும் அதையெல்லாம் நல்லா எழுதியிருக்கலாம் என்று. அதுபோக எழுதிய பெரும்பாலான விஷயங்கள் பிரச்சாரப்பட பாணியில் இருந்ததை காணமுடிந்தது. இதற்காக நான் வருத்தபடவில்லை இருந்தாலும் சிலர் அவர்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு அவைகளை வாசித்து இன்னும் சிலர் அதற்கு பின்னூட்டமும் இட்டிருந்தனர்.
அவர்களின் பொறுமைக்கு என் நன்றி.

தற்போது நான் பணிமாறபோவதால் இனி அதிகம் எழுத நேரமும் வசதியும் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கிடைத்த நேரத்தில் இவ்விஷயங்களை எழுத நினைத்தேன், எழுதி விட்டேன்.

பார்போம் தோழர்களே (இதைப்பார்த்து நான் கம்யூனிஸ்ட்னு யாரும் தப்ப நினைச்சிடாதீங்க)

Wednesday, July 27, 2005

பெண் சுதந்திரம்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். கிருபாகரன் என்று ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். வகுப்பில் காமெடியாக பேச தெரியாவிட்டாலும் நன்றாகதான் எடுப்பார். ஆனால் எனக்குதான் எப்படி முயற்சி பண்ணினாலும் தூக்கம் வந்துவிடும். ஒரு முறை அவர் ரெம்ப கோபமாக "ஏம்பா திருமலை உன்னால வகுப்பை அட்டென்ட் பண்ண முடியாட்டி வெளிய போயிடு" அப்படின்னார். எனக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருந்தது.

அதன்பிறகு தூங்காமல் பாடம் கவனிக்க கற்றுக்கொண்டேன் ஆனாலும் அவர் எப்போதும் ஒரு முறைப்பாகத்தான் என்னை பார்ப்பார். இந்நிலையை ஒரு சந்தர்ப்பம் மாற்றியது. ஒருமுறை சிலப்பதிகாரம் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கேள்வியை கேட்டார்." கண்ணகி கதாபாத்திரம் எதனை உணர்த்துகிறது" என்று. சிலர் தமிழ்நாட்டு கலாசாரத்தை என்றனர். சிலர் பெண்ணின் மேண்மையை என்றனர். நான் சடாரென எழுந்து "ஆணாதிக்க இலக்கியத்தை" என்றேன்.
எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக் பார்த்தனர். ஆனால் அவர் "திருமலை சொல்வது சரிதான்" என்றார்.

அதன்பிறகு எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உருவானது, ஆனால் இந்த விஷயத்தை பற்றி அதன் பிறகு நாங்கள் என்றுமே பேசியதில்லை. ஆனால் அவ்விடை என்னுள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது. எப்படி அந்த விடையை சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. பிறகு நான் படித்தவைகளும் எனக்கு அதைதான் உணர்த்தியது.

ஆனாலும் என்னை மிகவும் பாதித்தது எங்கள் வகுப்பில் இருந்த பெண்களின் ரியாக்ஷன். யாருக்குமே நடந்தது தெரிந்த மாதிரி தெரியவில்லை. ஒருவேளை எல்லோரும் விழித்துகொண்டே தூங்கிகொண்டிருந்தனரோ என்னவோ?

சிலகாலம் கழித்து டிவியில் "அவள் அப்படித்தான்" படம் போட்டிருந்தார்கள். அதில் கமல் ஒரு நிருபராக நடித்திருப்பார். அவர் எந்த பெண்ணை பார்த்தாலும் "பெண்களின் சுதந்திரத்தை பற்றி என்ன நினைக்கீறீங்க" என்று கேள்வி கேட்பார். சிறீபிரியா ஒரு முற்போக்குவாதியாக் நடித்திருப்பார். கமலும் அவரும் ஒருவரை ஒருவர் விரும்புவர். சிறீபிரியா அதற்குமுன் ஒரு காதல் தோல்வியடைந்திருப்பார். கிளைமாக்ஸில் கமல் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் சரிதாவை கல்யாணம் செய்துகொண்டுவிடுவார். புதுமணத்தம்பதிகளை சிறீபிரியா சந்திப்பார். அப்போது வரும் உரையாடலை கிழே அவ்வடிவில் கொடுக்கிறேன்.

சிறீபிரியா கமலிடம் " நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் ஒரு கேள்வி கேட்பீங்க வுமன்ஸ் லிபரேஷனை பத்தி அதை உங்க மனைவியிடம் கேக்கலியா"

சரிதா வெகுளியாய் "என்ன சொல்றீங்க?"

கமல் "பெண்கள் சுதந்திரத்தை பற்றி நீ என்ன நினைக்கிறன்னு கேக்கிறாங்க"

சரிதா அதே வெகுளித்தனத்துடன் " அதப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது"

சிறீபிரியா " அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க"

அப்போது என் அம்மா " ஏண்டா இதைப்போய் பாத்திட்டு இருக்கே. வேற எதாவது நல்ல படம் மாத்துடா"

இப்படம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. பெண்களின் நிலைப்பற்றி பெரும்பாலான பெண்களே சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. எனக்கென்னவோ நிறைய பெண்கள் இப்படி இருப்பதையே விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. இப்போது வரும் டிவி தொடர்களும் பெண்களை பின்னோக்கியே கொண்டுசெல்ல விழைகின்றனர். அத்தொடர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு பெண்களிடமிருந்துதான்.

இன்னும் சில திரைப்படங்களிலும், தொடர்களிலும் காட்டப்படும் ஒரு காட்சி தாலிகட்டுவதற்கு முன் மாப்பிள்ளை வீட்டார் தகராறு பண்ணுவர் உடனே பெண்ணின் அப்பா "அய்யா இப்ப வந்து கலியாணத்தை நிறுத்தினா அப்புறம் எம்பொண்ணை யாருப்பா கட்டுவா". அப்படியும் அவர்கள் போய்விட்டால் உடனே பெண்ணின் அப்பா அங்கே அமர்ந்திருக்கும் ஒரு மாமன் மகனோ அல்லது அத்தை மகனிடமோ சென்று "தம்பி நீதான் எம்பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கணும்" என்று கெஞ்சுவார். அதைப்பார்க்கும் நம் பெண்களும் ஆஹா என்ன தங்கமான பையன் என்று சர்ட்டிபிகேட் கொடுப்பனர். இந்த காட்சிகளை பார்க்கும் போது எனக்கு பெரும்பாலும் பி.பி எகிறிவிடும். என் மனதுக்குள் "இதை உருவாக்கியவன் உங்களையெல்லாம் கேவலப்படுத்தறான் ஆனால் நீங்க என்னடான்ன உச்சு கொட்டிட்டு இருக்கீங்களேன்னு " கத்திட்டு இருப்பேன்.

சுதந்திரம் என்பது பெண்களுக்கு மற்றவர்கள் குடுக்க கூடியதில்லை. அதை அவர்களே உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. தாங்கள் பெண்கள் அதனால் இப்படிதான் இருக்க வெண்டும் என்ற மனப்பாண்மையிலிருந்து பெண்கள் வெளிவந்தால்தான் நாம் அடுத்த நிலைக்கே போகமுடியும். இப்போதே நிறைய பெண்கள் அப்படி வெளிவந்து நன்றாக தான் வாழ்கிறார்கள். என்ன இது பெருநகரங்களில்தான் நடக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக அதிகமாகத்தான் உண்மையான பெண் சுதந்திரம் உருப்பெறத்தொடங்கும்.

Tuesday, July 26, 2005

அவரும் ஒரு மனிதன் தானே-----

இன்றைய வலைப்பதிவுகளில் ரஜினியை பற்றி யார் எழுதினாலும் உடனே பின்னூட்டங்கள் குவிந்து விடுகின்றனர். பாதிப்பேர் ஆதரவளிக்கின்றனர் மீதிப்பேர் எதிர்கின்றனர். பத்தாதற்கு மாறி மாறி வசைச்சொற்கள் வேறு பயன்படுத்தபடுகின்றனர்.

இதற்கான காரணங்களை அலச ஆரம்பித்ததின் தொடக்கம்தான் இந்த பதிவு.
முதலில் ரஜினி யார்?
அவர் கர்நாடகத்திலிருந்து வந்தவர், மகராஷ்டிரத்திலிருந்து வந்தவர் என்று நிறைய பேர்களும் நான் முதலில் ஒரு இந்தியன் பிறகு ஒரு தமிழன் என்று அவரும் கூறுகின்றனர்.
ஆனால் என்னை பொருத்தவரை முதலில் அவர் ஒரு மனிதன்.

ஒரு மனிதன், அவர் மட்டுமல்ல நாமெல்லோரும்தான், வாழ்வில் என்ன செய்கிறோம்? முதலில் படிக்கிறாம், அது முடிந்தவுடன் பிழைக்க ஒரு வேலை தேடுகிறோம். ஆரம்பத்தில் பிடித்த வேலையாக் தேடுகிறோம் அது கிடைத்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் பொழப்புக்காக ஒரு வேலையை தேடி அதில் அமர்கிறோம். இதில் சிலர் அவரவர் சொந்த இடத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு, நாடுகளுக்கும் செல்கின்றனர். அதன்பின் சேமிக்க,சொத்து சேர்க்க, சமூகத்தில் பேர் புகழ் அடைய, அவரவர் தகுதிக்கேற்ப முயல்கிறோம்.
இதைத்தானே அவரும் செய்தார்.

நான் ரஜினி படங்களை சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். நான் என்ன அவர் சந்தோஷத்துக்கா பார்க்கிறேன். என் சந்தோஷத்துக்காக என் மனமகிழ்வுக்காக பார்க்கிறேன். இதில் அவர் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறார் என்று சொல்ல முடியுமா!. என்னைபோல பலரை மகிழ்விப்பதால் அதனால் பயன் அடையும் வியாபாரிகள் அவருக்கு அச்சம்பளம் கொடுகின்றனர். இதை குற்றமென்று சொல்ல முடியுமா. அவர் அப்பணத்தை என்ன செய்கிறார் என்பது அடுத்து விவதத்துகான விஷயம்.

இப்போது நான் வெளிமாநிலத்தில் இருக்கிறேன். என் அண்ணன் தங்கைகள் என் சொந்த ஊரில் இருக்கின்றனர். என் தகுதிக்கேற்ப இவ்விடத்திலும், சொந்த ஊரிலும் சொத்து வாங்க முயலுவேன். இதை தப்பு என்று யாராவது கூற முடியுமா?
சிலர் சொல்வது போல் ரஜினிக்கு போயஸ் கார்டன், கேளம்பாக்கம் மட்டும் தமிழ்நாட்டில் சொத்துக்கள் அல்ல. அதுபோக நிறைய தமிழ்நாட்டு நிறுவனங்களிலும் அவர் பங்குகள் வைத்துள்ளார். காசு கொடுத்தமா படம் பார்த்தாமான்னு வரனும். அதைவிட்டு நாங்க கொடுத்த காசை நீங்க இப்படித்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. நம்ம முதலாளி நீ சம்பளத்தை நான் சொல்றமாதிரிதான் செலவு செய்யனும்னு சொன்னா எவ்வளவு தப்போ அது மாதிரிதான் இதுவும்.

சிலர் ரஜினியை வெறுப்பதற்கு சில ரஜினி ரசிகர்களும் காரணம் என்று நினனக்கிறேன். எதாவது சொல்லிட்டா போதும் உடனே "எங்க தலைவனையா சொல்றே, டேய் டூய் "னு குதிக்க வேண்டியது. அவர்களுக்கு நான் சொல்லிக்க விரும்புவது, உங்களுக்கு பிடிச்சிருக்கா உங்களோட வெச்சுக்கங்க. மத்தவங்களுக்கும் பிடிக்கணும்னு நினைக்கதீங்க. பிடிக்காத் கருத்தை யாராவது சொன்னா நிதானமா அதற்கு பதில் கொடுங்க. அதைவிட்டுட்டு கசாமுசான்னு பேசாதீங்க.
இதற்கு ரஜினியின் செய்கை மூலமே ஒரு உதாரணம் தர விரும்புகிறேன். காவேரி பிரச்சினையில் நெய்வேலி மாநாட்டில் பாரதிராஜா ரஜினியை கன்னாபின்னா என்று திட்டி தீர்த்தார். அடுத்தநாள் ரஜினி உண்ணவிரதத்திர்க்கு கிளம்புவதற்கு முன் சில நிருபர்கள் அதைப்பற்றி கேட்டதற்கு அவர் "அவர் பேசியது தப்பு ரொம்ப தப்பு" என்று ஒற்றை வரியில் டீசண்டாக முடித்துகொண்டார். எனக்கு தெரிந்து ரஜினி இதுவரை அதைப்பற்றி எந்த பேட்டியிலும் பேசவில்லை. அதன் பின்னர் பாரதிராஜா கூட ரஜினியை பாராட்டி(என்ன விஷயமென்று மறந்து விட்டது) பேசினார்.

எனக்கும் ரஜினியை அவரது திரைப்படங்களையும் தாண்டி பிடிக்கும். அதற்கான காரணங்களை கீழே கொடுத்துள்ளேன்.

கருப்புநிற ஹிரோவாய் தமிழ் சினிமாவில் ஒரு Trend Setter.

சினிமாவில் மட்டுமே நடிப்பது

சின்ன சின்ன கட்சிகள் கூட சென்னையில் மாநாடு நடத்துகிறோம் என்று லாரியில் கூட்டம் சேர்க்கும் பொழுது தான் உண்ணாவிரதம் நடத்திய்போது வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரவேண்டாம் என்று கூறியது(வரச்சொல்லியிருந்தால் வந்த கூட்டத்தால் சென்னை ஸதம்பிட்த்து இருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை)

இன்றுவரை ரசிகர்களை தன் சுயலாபத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது(மாற்றி கருத்து இருப்பவர்கள் பொருக்க, இதற்காக ஒரு பின்னூட்டத்தை வீண் செய்ய வேண்டாம், இது என் கருத்து)

ஒரு படத்திற்கு பத்து கோடிவரை குடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்குபோது கூட காசுக்காக படம் பண்ணாமல் நிதானமாக காலம் எடுத்து படம் செய்வது

ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த நிலையிலும் அவரின் தன்னம்பிக்கை என்னை கவர்ந்த விஷயம் என்று சொன்னது(அதற்கு பிறகு ஜெ போராடி ஜெயித்த விஷயம் அவரின் தன்னம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றியது)

பாமாக அவர் படத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட போது ரசிகர்களை வன்முறையில் ஈடுபடச்செய்யாமல் அடக்கி வாசித்தது(ரசிகர்கள் பாதிப்படையக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்)

நேற்று முளைத்த சிறு நடிகர்கள் கூட எங்கள் படம் பிளாப்பில்லை வியாபாரரீதியில் லாபம்தான் என்று கூறும்போது 5 கோடிக்கு மேல் லாபம் பார்த்த பாபா படத்தை பிளாப் என்று பெருந்தென்மையாக கூறியது

இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

இதைப்போலவே அவரிடம் பிடிக்காத சில விஷயங்களும் சில இருக்கின்றன. அவை

இவர் பெயரை உபயேகித்து அவர் குடும்பத்தினர் செய்யும் சில கூத்துக்கள்(உதாரணமாக ரஜினி 25 நிகழ்ச்சி- இதற்கு அவர் உண்மையாகவே அவர் உடன்பட்டாரா என்று தெரியவில்லை)

அவரை சுற்றி இருக்கும் ஒரு காக்காய் கூட்டம்(பாபா படத்தின்போது இவர்களின் சில செய்கைகளினால் நிறைய விமர்சினங்கள் எழுந்தனர்)

அவசரப்பட்டு எடுத்த சில அரசியல் முடிவுகள்(இதற்கு அந்த காக்காய் கூட்டமும் காரணம் என்று நினைக்கிறேன்) ஏனென்றால் இந்த முடிவுகள் எடுப்பதற்குமுன் சாதாரண மக்கள் சிலரை சந்தித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் சும்மாயிருந்திருக்க வேண்டும்.

அவர் படங்களில் வரும் சில தேவையில்லாத தனிமனித துதிபாடல் வசனங்கள்(உதாரணமாக சந்திரமுகியில் பிரபு ரஜினியைப்பற்றி பேசும் சில வசனங்கள்)

எல்லத்தையும் சீர்தூக்கி பார்க்கும் போது அவர் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாதவராகவே தெரிகிறார். மத்தவங்களுக்கு நல்லது பண்ணாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் நின்னக்காம இருந்தாலே போதும் என்பது என் கருத்து.

பின்குறிப்பு:
இன்னும் நிறைய எழுத நினைத்தேன் ஆனால் கைவலிப்பதால் அதை சமயம் கிடைக்கும்போது இன்னொரு பதிவில் பதிக்கிறேன்.