Friday, August 05, 2005

இன்றே கடைசி! திங்கள் முதல் புது ரிலீஸ்..............

எக்சிட் இன்டர்வியு முடிச்சாச்சு!
ரிலீவிங் ஆர்டர் வாங்கியாச்சு!
ஃபேர்வெல் மெஸெஜ் அனுப்பியாச்சு!
பசங்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு!
பொண்ணுக்கிட்டயும் தான்!

இனி

புது வேலை!
புது ஆபிஸ்!
புது ஆளூக!
கலக்கல்தான் போங்க...

ஏர்டெல் எதோ பாயிண்ட் இல்லைன்னு கனெக்ஷன் குடுக்க மாட்டேனுட்டானுக. போய் டாடா இன்டிகாம் கிட்ட பேசனும். இணைய கனெக்ஷ்ன் வீட்டுக்கு குடுக்கணும். திரும்பவும் எழுதனும். நிறைய கத்துக்கனும்.

ஆதலால் நண்பர்களே அதுவரை Have Fun

வாழ்த்துகளுடன்

வெற்றி திருமலை

Thursday, August 04, 2005

சாதி என்றொரு மாய்ப்பிசாசு

காஞ்சி பிலிம்ஸ் "இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு?" என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த போது எழுத நினைத்தவை இவை.

இட ஒதுக்கீட்டை விட்டு விடுவோம். என் மனதுள் எழும் கேள்வி இதுதான்.

பிறப்பால் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிப்பது சரியா?

இக்கேள்வியை எழுப்பிய உடனே இணையத்தில் அதிகமாக எழுதிவரும் சில நடுநிலைவாதிகள்(?), நாங்களும் அதைத்தான் சொல்லி வருகிறோம் என்று விளம்புவார்கள்.

ஆனால் அவர்களின் எத்தனை பேர் தங்களின் உள்மனதில் "தாங்கள் உயர்ந்தவர்கள்" என்ற எண்ணம் இல்லாமலிருப்பவர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் எழுத்தை தொடர்ச்சியாக வாசித்த போதுதான் தெரிகிறது அவர்கள் ஆங்காங்கே அவர்களையறியாமல்(?) வெளிப்படுத்தும் அந்த உயர்வு மனப்பாண்மை.

நான் பிராமணனகாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று டோன்டு ஒரு பதிவில் கூறினார்(சமீபத்தில்தான் படித்தேன்). இதில் பெருமையடைவதிற்கு என்ன இருக்கிறது.
இதேபோல் நான் ஒரு பள்ளனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் பறையனாக பிறந்ததிற்கு பெருமையடைகிறேன் என்று கூற முடியமா? அப்படியே கூறினாலும் மக்கள் ஒரே அளவுகோலில் பார்ப்பார்களா?
இதையும் சொல்லிவிட்டு நான் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை என்று கூறுகிறீர்களே இது உங்களுக்கு நெருடலாயில்லை? இந்த ரெண்டு விஷயத்தில் எதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.
அதை மட்டும் சொல்லிவிடலாமே.
மனதுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுவதைவிட நினைத்ததை நேரிடையாகவே சொல்லிவிட்டால் குறைந்தபட்சம் உங்களின் மனதுக்காவது துரோகம் பண்ணாத பெருமை கிடைக்கும்.

சாதி பற்றி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் கருத்தை கூறுங்கள் அல்லது அதைப்பற்றி எழுதாமலே விட்டுவிடுங்கள். அதைவிட்டுவிட்டு ஆதரிக்காமாதிரி எதுக்கறது, எதிர்க்கிற மாதிரி ஆதரிக்கறது என்ற அறிவுஜீவி முயற்சிகள் வேண்டாம்.

(பி.கு:- இந்த பதிவுலும் அனானிமஸ் பின்னுட்டங்களுகான வசதியை எடுத்துவிட்டேன், ஏனென்றால் முகம் தெரியாமல் வந்து ஒருவரை வசைபாடுவது எனக்கு பிடிக்காது. அதற்கு பின்னூட்டங்கள் ஒன்றும் வரமாலிருப்பதே மேல்)