Thursday, July 21, 2005

ஏன் அவர்களை இப்படி?

இந்த விஷயம் ரொம்ப நாளாகவே என் மனதில் உறுத்திகொண்டிருந்தது. இன்றுதான் அதை பதிவு பண்ண ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. என்னடா இன்னும் விஷயத்தையே என்னன்னு சொல்லாம பினாத்திகிட்டு இருக்கானேன்னு சபிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன் இது பாலியல் தொழிலாளர்களை பற்றியது.

அப்பப்ப தினசரிகளில் அழகிகள்(?) கைது அப்படின்னு கட்டம் கட்டி படத்தோட செய்தி வரும் அதுலவேற நம்ம தொப்பை போலீஸ் போஸ் கொடுத்துக்கிட்டு நிப்பாய்ங்க. அப்பத்தான் யோசனை வரும் அந்த பாவப்பட்ட அழகிகள் அப்படி என்ன குத்தம் செஞ்சிட்டாங்கன்னு இப்படி போட்டு மானத்தை வாங்குரானுகண்னு.

மும்பை கமிஷனர் ஒருவர் கூட ஒருமுறை சொன்னார். மும்பையில் இருக்கும் ஆண்களில் 60% பேர் பிரம்மசாரிகள் அவர்களுக்கு பெரும் வடிகாலாய் இருப்பது பாலியல் தொழிலாலர்கள்தான். அத்தொழிலை நிறுத்தினால் வீதியில் போகும் குடும்ப பெண்களுக்கு அது ஆபத்தாகிவிடும் என்று.

அப்படி உடல் அரிப்பெடுத்து சுகத்துக்காக அலையும் மனிதர்கள் மத்த குடும்ப பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் தடுத்து அவர்களின் அரிப்பை தீர்த்து அதற்கு கூலியை பெற்றுக்கொள்கிறார்களே அதுவா பெரிய தப்பு? எதற்கெடுத்தாலும் போரடும் மனித உரிமை, மகளிர் அமைப்புகள் ஏன் இவர்கள் அவமானபடுத்துவதை மட்டும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை

என்ன அவங்க வேற வேலையிருந்து அதை பண்ணாமய இந்த தொழிலுக்கு வராங்க. எதோ வயித்து பொழப்புக்கு வேற வழியில்லாம் இதை பண்ண வேண்டியதா இருக்குது. இதில்லாம வெறும் உடலைக்காட்டும் டான்ஸ் மட்டும் செஞ்சு குடும்பத்தை பார்த்துகலாம்னா அதுக்கும் அரசாங்கம்(மும்பை) ஆப்பு வெச்சிருச்சி. டான்ஸ் பார் தடைக்கு அப்புறம் பேட்டி கொடுத்த பெண்களெல்லாம் "எதோ உடம்ப மட்டும் காட்டி பொழப்ப பார்த்துகிட்டு இருந்தோம். இனி உடலை விக்கிறதை தவிர வேற வழியில்லை" என்று சொன்னார்கள். டான்ஸ் பார்களின் தடைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் 5000 கும் மேலயாம். எதோ கமிஷன் தகராறுல மும்பை அரசாங்கம் அவங்க வயித்தில அடிச்சிருச்சு.

இங்க தமிழ்நாட்டுல என்னடான்னா மாசக்கடைசியில் கேசு கிடைக்கலியா அவங்களை பிடித்து உள்ள போடு என்கிறமாதிரி கொதறிவிடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதை சட்டரீதியா அங்கீகரித்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன். கூடவே ஒரு லைசன்ஸ் முறையும் கொண்டுவந்திட்டா அவங்க சம்மதிமல்லாமல் தொழிலுக்கு அழைத்துவரப்படுகிறவர்களையும் காப்பாற்றி சம்பந்தபட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கலாம். எந்த அரசாங்கம் தைரியத்துடன் இதை செய்யப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்?

Tuesday, July 19, 2005

சல்மான் கான் ஒரு தேசத்துரோகி சொல்கிறது பா ஜ க!

மும்பை திரைப்பட உலகிலிருந்து ஒரு குழு பாஜக தலைவர் கோபிநாத் முன்டேயை சந்தித்துவிட்டு தோல்வியுடன் திரும்பியிருக்கிறது. அவர்களின் கோரிக்கை "சல்மான்கானின் பிரச்சினைக்காக தயாரிப்பாளர் காசு போட்டு படமெடுக்கும் படத்தை ஏன் ஒட விடாமல் தடுக்க வேண்டும். அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே". அதை முடியாது(பின்னே அத்வானி உளறலுக்கு பிறகு உருவான பிரச்சினையை திசை திருப்ப இதைதானே பயன்படுத்த முடியும்) என்று மறுத்த அவர் படத்துக்கு எதிரான் போராட்டம்(?) தொடரும் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் தான் இந்த காமெடியான் ஐட்டத்தை செய்தியில் படித்தேன். சல்மான்கான் ஒரு தேசத்துரோகி என்று பாஜக'வினர் சொல்கின்றனர் என்று.

ஒருநாள் பாராளுமன்றம் நடத்த எவ்வளவோ கோடி செலவாகுதாமா! ஆனா இந்த கட்சி வாரக்கனக்குல அதை நடத்த முடியாம் பண்ணிச்சே அப்ப எவ்வளவு பணம் நாட்டுக்கு நட்டம். எவ்வளவு பிரச்சனையை கவனிக்காம் இருந்திருப்பாய்ங்க. அது தேசத்துரோகமில்லையா??

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது ஒண்ணுமில்லாத பாபர் மசூதி பிரச்சினையை ஊதி பெருசு பண்ணினாய்ங்களே அது தேசத்துரோகமில்லையா??

இதிலே இவிங்க அடுத்தவங்களை(குடிபோதையில் ஒரு நடிகர் பேசிய வார்த்தைகளை வைத்துகொண்டு அதுவும் இன்னும் விசாரணையிலிருக்கும் நிலையில்) சொல்கிறாய்ங்க!!!!

அட தேவுடா!!!!!!!!!!!!

Friday, July 15, 2005

ஒரு காதல் கவிதை

என் நண்பன் ஒருவன் அனுப்பி வைத்த கவிதை(?)

Thursday, July 14, 2005

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!!

என் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவனது தந்தை ஒரு ரோடு காண்டிராக்டர்.
கொஞ்ச காலம் முன்பு ஒரு ரோடு காண்டிராக்டு (ரூபாய் 20 கோடி மதிப்பு) விஷயமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு மத்திய மந்திரியை பார்க்க போயிருந்தார்களாம் அதுவும் சும்மாயில்லை ஒரு பலமான சிபாரிசோடு. அவரின் பிஏ எல்லாம் விசாரித்துவிட்டு சொன்ன விஷயம் 10% கமிஷன் கொடுத்துவிட்டு காண்டிராக்டு எடுத்துகொள்ளலாம் என்று. நான் அதிர்ச்சியாகி 10% என்றால் அதிகமில்லையா என்றேன். அதற்கு அவன் இது தான் கரண்ட் ரேட் என்றான். அதற்கப்புறம் சேகரித்த விஷயங்களை கீழே தருகிறேன்.

மந்திரி கமிஷன் -> 10 %
RTO கமிஷன் -> 1-2% (லாரிகளில் ஒரு குறிப்பட்ட அளவுதான் ஜல்லி எடுத்துசெல்ல வேண்டுமாம் ஆனால் அதன்படி செயல்பட்டால் அதிக லாபம் பார்க்க முடியாது எனவே இந்த கமிஷன் இதற்கு மேலும் கூட ஆகலாமாமம் ஆனால் இது அவருக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சேர்த்துதான்)
Bill பாஸ் கமிஷன் -> 1-2% (பில் பாஸ் பன்னும் அதிகாரி வேண்டுமென்றே நாள் கடத்துவாராம் அவரை சரிகட்ட இது)
உள்ளூர் எம் எல் ஏ -> 2% (இது ஒரு எழுதப்படாத விதி)
காண்டிராக்டு சிபாரிசு செய்தவர்க்கு - 1%
மத்த Adjustments -> 5% (மாமா வேலை பார்க்கறதுக்கும் சேர்த்துதான்)
காண்டிராக்டர் லாபம் -> 15%- 20%

இதெல்லாம் சேர்த்தே கிட்டத்தெட்ட 35%. அப்போ அரசாங்கம் குறிப்பட்ட ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கினா போட்டப்பட்ட ரோடோட மதிப்பு 65 ரூபாய்தான். இந்த காண்டிராக்டு ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கானது. இங்கு தரத்தை ஒரளவாவது கடைப்பிடிக்கவேண்டும். இதுவே சாதாரண சாலைகள் என்றால் தரம் மிகவும் மட்டமாக இருக்கும். அங்க செலவு செய்யப்படும் தொகை இக்கணக்கின் படி பார்த்தால் நிச்சயம் 50 சதவிகித்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆகவே, அரசாங்கம் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சாலை மேம்பாடுகளுக்கு ஒதுக்கினால் செய்யப்பட்ட பணியின் மதிப்பு கிட்டத்தெட்ட 600 கோடிக்குதான் இருக்கும். மீதி 400 கோடி பணந்தின்னி வல்லூறுகளுக்கு போய்விடும். இதுக்கு உலகவங்கிகிட்ட அப்பப்ப கடன் வேறு. கண்டவன் ஃபாரின் காரில் போவதற்கும், ஏ சி ரூமில் தண்ணியடிக்கவும், பொண்டாட்டிக்கு அவ எடைக்கு நிகராக தங்கம் போடுதற்கும், பசங்களை பாரின்ல படிக்க வைக்கிறதுக்கவும், நாம் வட்டி கட்டி மாரடிக்க வேண்டியதாயிருக்கு.


அட தேவுடா!!!!!!!!!!!!!!!!

Friday, July 08, 2005

நம் நாட்டின் தலையாய பிரச்சினை!!!!!

இன்றைய நிலைமையில் ஒரு மக்கள் கூட்டத்தில் போய்நின்று நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு என்ன காரணமென்று கேட்டால் ஊழல்,லஞ்சம்,அரசியல்வாதிகள், சாதி மற்றும் லேட்டஸ்ட்டாக மக்களின் அலட்சியம் என்று கூட பதில் வரும். ஆனால் நாமெல்லாம் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறோம் அதுதான் 'மக்கள்தொகை பெருக்கம்'.

இன்னும் எந்த அரசியல்கட்சியும் இந்த பிரச்சினையை தங்கள் அஜண்டாவாக எடுத்துகொள்ளவில்லை, எந்த திரைப்படத்திலும் இதை விவாதிக்கவில்லை, யாரும் இன்னும் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

அரசாங்கமும் அவ்வப்பொழுது 'நாமிருவர் நமக்கிருவர்' என்று ஆங்காங்கே எழுதிவிட்டு அதை கிடப்பில் போட்டுவிடுகிறது. ஆனால் இன்றைய நிலைமை என்ன?

காடுகள் கனிசமான அளவில் அழிக்கப்பட்டுவிட்டன.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறாம், சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று ஊருக்குள் இருக்கும் மரங்களை வெட்டித்தீர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இன்னும் சில காலங்களில் சுத்தமாக வற்றிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நகரங்களை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் பக்கத்திலிருக்கும் கிராமங்களும் கபளீகரம் செய்யபடுகின்றன.

மழை வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்ததே என்றாலும் அதற்கு காரணம் மக்கள்தொகை பெருக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. குறிப்பாக பெங்களுரை நான் கடந்த ஐந்து வருடங்களாம் பார்த்து கொண்டு வருகிறேன். 2000,2001 ஆண்டுகள் மழை அபரிதமாக இருந்தது, அதுவும் ஏப்ரல், மே மாதத்தில் கூட மாலை வேளையில் தவறாது மழை பொழிந்ததை கண்டிருக்கிறேன். என்ன தான் சூரியன் நடு உச்சியில் இருந்தாலும் அது ஒருபோதும் சுட்டதில்லை. ஆனால் இன்று?
கடந்த ஏப்ரல், மேயில் மதிய வேளையில் வெளியில் தலைகாட்டமுடியவில்லை. பெரும்பாலான சாலையோர மரங்களை வெட்டிவிட்டார்கள். ஒன்றிரண்டு மழை மேகங்கள் நகருக்குள் வந்தாலும் குளிர்விக்கும் மரங்கள் இல்லாததால் டா டா காண்பித்து விட்டு போய்விடுகிறது. எதோ லால்பாக், கப்பன் பார்க்னு சில இடங்கள் இருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் மழை கண்ணில் படுகிறது.

இங்கயே இப்படினா தமிழ்நாட்டை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும் வறட்சி, புலம்பல். விவசாயம் செய்யும் மக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் ஆனால் தேவைகள் அதிகமாகிகொண்டே வருகிறது.

இவைகளுக்கெல்லாம் முக்கிய காரணியான மக்கள்பெருக்கத்தின் ஆபத்தை இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை. நிலைமை இப்படியே நீடித்தால் நம் பேரக்குழந்தைகள் காலத்தில் எல்லோருக்கும் நிற்பதற்குதான் இடமிருக்கும். இன்றைய நிலைமையில் ரெண்டு குழந்தை பெறுவதே அதிகம் என்று தோண்றுகிறது. ஊருக்கு உபதேசம் என்பதைவிட முதலில் நாம் திருந்த வேண்டும் என்பதால் நான் ஒரு குழந்தை போதும் என்ற தீர்மானம் எடுத்துவிட்டேன். மற்றவர்கள் எப்படியோ?

யாராவது ஒரு திரைப்படம் இதைப்பற்றி எடுத்தால் பரவாயில்லை ஏன்னா மக்களுக்கு அதுதான் சீக்கிரம் போய்சேருகிறது.

Monday, July 04, 2005

அண்ணே வணக்கம்!!!!!!!!!!

என்னடா வலைப்பூ வலைப்பூ ங்கிறாய்ங்களே நாமளும் ரெண்டு எழுதிப்போட்டா என்னன்னு தோணுச்சு.....ஆனா எழுதலாம்னு ஆரம்பச்சதுக்கு அப்புறம் தான் குழப்பமே தொடங்குச்சு..
என்னத்தை ஆரம்பிக்கிறது...அதுல இந்த பான்ட் கொடைச்சல் வேற..அப்புறம் மனசில சில தலைப்புகள் - பெணகளின் நிலைப்பாடு, இந்தியப்பத்திரிக்கைகளின் பொருப்பிண்மை, சினிமா அரசியல் -இப்படின்னு பட்டியல் நிண்டுகிட்டே போச்சு ஆனா எதை ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சு தலை பிச்சுகிட்டதுதான் மிச்சம்.
அப்ப தான் ஒரு பல்பு பளீர்னு உள்ள எரிஞ்சுச்சு.... இந்த குழப்பத்தையே முதல் பதிவா போட்டு அரங்கேற்றம் பண்ணீட்டா என்னன்னு.

ஆதலால் வலைப்பூ மானிடர்களே ....இங்கனம் எனது முதல் பதிவு பதிக்கப்படுகிறது.